செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஜே.வி.பி.யின் தலைவர் அனுரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!!

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!!

Published on

spot_img
spot_img

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக அனுரகுமார திஸாநாயக்க நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று அம்பலப்படுத்தியிருந்தார்.

பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக ஹம்பாந்தோட்டை உள்ள சிறிபோபுர காட்டுப்பகுதியில் தலா 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 காணிகள் தொடர்பான உறுதிப் பத்திரத்தை அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.

மேலும் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான நேரடி ஒளிபரப்பு வாகனம், பத்தரமுல்லையில் சி.எஸ்.என் வலையமைப்பின் 200 மில்லியன் ரூபாய் கட்டிடமும் அவரது பெயரில் இருப்பதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

அத்தோடு பத்தரமுல்லையில் உள்ள 235 மில்லியன் மதிப்புடைய கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் வலையமைப்பு, 138 மில்லியன் பெறுமதியான நுகேகொடையில் அமைந்துள்ள காணி மற்றும் கட்டடம் குறித்தும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...