சென்னை தாம்பரம் – கடற்கரை இடையே 2-வது நாளாக மின்சார ரயில் சேவை ரத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். தாம்பரம் – கடற்கரை இடையே இருமார்க்கத்திலும் காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் சொந்த வேலைக்காக வெளியே செல்லும் மக்கள் தவித்தனர். தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.