Homeஉலகம்சாதி பாகுபாடுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் அமெரிக்க நகரம் சியாட்டில்.

சாதி பாகுபாடுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் அமெரிக்க நகரம் சியாட்டில்.

Published on

வாஷிங்டன், இந்தியாவில் சாதி ரீதியிலான பாகுபாடுக்கு, 1948-ல் தடை விதிக்கப்பட்டது. கடந்த 1950-ல் நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு சட்டம் அந்த கொள்கையை நிலைநிறுத்தியது. ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் சாதி ரீதியிலான பாகுபாடுக்கு தடைவிதிக்கப்படவில்லை. அங்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட சில இடங்களில் சாதி பாகுபாடு தடை செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் பிற இடங்களிலும் சாதிய ஒடுக்குமுறையை ஒழிக்க ‘ஈக்வாலிட்டி லேப்ஸ்’ என்ற அமைப்பு அமெரிக்காவில் போராடி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான சியாட்டில் நகரில் சாதி பாகுபாடுக்கு தடை விதிக்கும் தீர்மானம் நகர கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த சியாமா சாவந்த் என்ற பெண் உறுப்பினர், “நகரில் பல்வேறு வகையிலான பாகுபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சாதி ரீதியிலான பாகுபாடும் இணைக்கப்பட வேண்டும்” என்ற தீர்மானத்தை நகர கவுன்சிலில் கொண்டு வந்தார். ஓட்டெடுப்பில் இந்த தீர்மானத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்ததை தொடர்ந்து, தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சாதி பாகுபாடுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் அமெரிக்க நகரமாக சியாட்டில் உள்ளது.

Latest articles

GMPL 3.0 இல் கலக்கப்போகும் 7 அணிகள் விபரம்.

  கல்வியங்காடு மெகா நைட் பிரிமியர் லீக் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சயாக கிப்ஸ் மைதானத்தில் இடம்பெறும், இத் தொடரில் இந்த...

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

13 ஆவது ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பமாகிறது. 10 அணிகள் மோதும் உலக கிண்ண...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5000 சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5,000 சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்...

More like this

GMPL 3.0 இல் கலக்கப்போகும் 7 அணிகள் விபரம்.

  கல்வியங்காடு மெகா நைட் பிரிமியர் லீக் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சயாக கிப்ஸ் மைதானத்தில் இடம்பெறும், இத் தொடரில் இந்த...

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

13 ஆவது ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பமாகிறது. 10 அணிகள் மோதும் உலக கிண்ண...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...