Homeஇலங்கைகொழும்பு துறைமுக நகரத்திலுள்ள அனைத்து உணவகங்களையும் அகற்ற நடவடிக்கை

கொழும்பு துறைமுக நகரத்திலுள்ள அனைத்து உணவகங்களையும் அகற்ற நடவடிக்கை

Published on

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள உணவகங்கள் அனைத்தும் அகற்றப்படும் என கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு அரசாங்கத்தின் நிதிக்குழு முன்னிலையில் அறிவித்துள்ளது.

2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த உணவகங்கள் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து உணவகங்களும் கொழும்பு துறைமுக நகர பொருளாதாரத்துடன் இணைந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் கீழ் இயங்குவதாகவும் அவ்வாறே அது நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரம் முக்கியமாக வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இவ்வாறான உணவகங்களை அமைப்பதற்கான சட்டபூர்வமான தன்மை குறித்து அரசாங்கத்தின் நிதிக்குழு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அதிகாரிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

துறைமுக நகர அபிவிருத்தியில் நாட்டின் ஏனைய பகுதிகளில் முறைசாரா கழிவுநீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனவும் அதிகாரிகளினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கடந்த 12 ஆம் திகதி அரசாங்க நிதி தொடர்பான குழு கூடிய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...