Homeஇலங்கைகொழும்பில் மனைவியை கொலை செய்த கணவன்!

கொழும்பில் மனைவியை கொலை செய்த கணவன்!

Published on

விஜேராம ரப்பர் தோட்டத்தின் முதல் பாதையிலுள்ள அறையொன்றில் பதுங்கியிருந்த கணனி பொறியியலாளர் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத் தொழிலாளி ஒருவரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.எல்பொட கடுபிட்டிய பபேகம பிரதேசத்தை சேர்ந்த சதாசிவம் நிரஞ்சலா வயது 25 என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சடலம் உடபுஸ்ஸல்லாவை, சோகமவத்தை, உள்ள முட்புதர் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கயிறு போன்றவற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விசாரணைக்காக கைது செய்யப்பட்ட நபர் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் இருவரும் களுபோவில பகுதியில் உள்ள அறையில் தங்கியிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கணவனும் மனைவியும் கொழும்பில் இருந்து புஸ்ஸல்லாவைக்கு வந்திருந்த நிலையில் சந்தேகத்திற்குரிய கணனி பொறியியலாளர் பெண்ணிடம் விவாகரத்து கோரியதால் புஸ்ஸல்லாவ நகரில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் சந்தேகநபர் கொழும்புக்கு வந்துள்ளதாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...