Homeஇலங்கைகொழும்பில் சட்டவிரோத சிகரெட் விற்பனை - சீன பிரஜை ஒருவர் கைது

கொழும்பில் சட்டவிரோத சிகரெட் விற்பனை – சீன பிரஜை ஒருவர் கைது

Published on

கொழும்பில் சட்டவிரோதமாக சீன முத்திரையிடப்பட்ட சிகரெட்டுகளை விநியோகம் செய்த சீன பிரஜைக்கு கோட்டை நீதவான் ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்வுக்கு முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ள சீன முத்திரையிடப்பட்ட சிகரெட்டுகளை விநியோகித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட, சீன நாட்டவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார்,  கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (25.08.2023) முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகே ஒரு மில்லியன் ரூபா அபராதத்தை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.குறித்த சீனப் பிரஜையிடமிருந்து சுமார் 6,400 சிகரெட்டுகளை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பெறுமதி சுமார் 760,000 ரூபாய்கள் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, காலி மாகல்ல பிரதேசத்தில் 1.3 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த 52 வயதுடைய ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபரை சிகரெட்டுகளுடன் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...