Homeஇந்தியாகேரளாவில் வேகமாகப் பரவி வரும் நிபா வைரஸ்:அச்சத்தில் மக்கள்!

கேரளாவில் வேகமாகப் பரவி வரும் நிபா வைரஸ்:அச்சத்தில் மக்கள்!

Published on

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அம்மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நிபா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகின்றது.குறிப்பாக கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் நிபா வைரஸினால் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து கோழிக்கோடு மாவட்டத்தில் எதிர் வரும் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் நிபா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைய வேண்டாம் என மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் சுகாதாரத்துறைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அச்சுறுத்தும் நிபா வைரஸால் கேரளாவில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி மூலம் கைகளை கழுவ வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...