Homeஇந்தியாகுறைபாட்டுடன் பிறந்த குழந்தை ஒரே மாதத்தில் உயிரிழந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களுடன் மருத்துவமனையை முற்றுகை

குறைபாட்டுடன் பிறந்த குழந்தை ஒரே மாதத்தில் உயிரிழந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களுடன் மருத்துவமனையை முற்றுகை

Published on

சென்னையில் குறைபாட்டுடன் பிறந்த குழந்தை ஒரே மாதத்தில் உயிரிழந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களுடன் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி வனிதாவுக்கு 2வது குழந்தை கருவுற்றிருந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார்.

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் வனிதாவுக்கு கடந்த மே மாதம் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு ஆண், பெண் என இரு உறுப்புகள் இருந்ததாகவும் பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா கூட தெரியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் குழந்தைக்கு மூளைப்பாதிப்பு உள்ளிட்ட வளர்ச்சி குறைபாட்டால் பிறந்த ஒரே மாதத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கர்ப்பிணி பெண்ணுக்கு எடுக்கும் ஸ்கேனில் தவறு காரணமாக இது போன்று நடந்துள்ளதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்ததால் குழந்தையை இழந்த தாய் அதிர்ச்சியடைந்தார். அதனை தொடர்ந்து மடிப்பாக்கத்தில் உள்ள அந்த தனியார் மருத்துவமனையில் உறவினர்களுடன் சென்று வனிதா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசார் மற்றும் வனிதா தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...