யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் குடும்பப் பெண் ஒருவர், குழந்தையுடன் வாகனத்தில் வந்தவர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பானது.இந்த சம்பவம் நேற்று (20) பகல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
டச்சு வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து 31 வயதான இளம் குடும்பப் பெண்ணும், 3 வயது குழந்தையுமே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
வாகனத்தில் வந்த 4 பேர் திடீரென வீட்டுக்குள் நுழைந்து இளம் குடும்பப் பெண்ணை தூக்கிச் சென்று வாகனம் ஏற்றியுள்ளது, அழுதபடி சென்ற பிள்ளையையும் வாகனத்தில் ஏற்றியது.
அதேவேளை பெண்ணின் கணவன் கனடாவில் வசிப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.