Homeஇலங்கைகாலி முகத்திடல் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவரின் விபரீத முடிவு

காலி முகத்திடல் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவரின் விபரீத முடிவு

Published on

காலி முகத்திடல் போராட்டத்தின் முக்கிய உறுப்பினராக செயற்பட்ட புத்தி பிரபோத கருணாரத்ன என்ற இளைஞன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

போராட்ட களத்தில் கணிசமான பங்கு வகித்து, முன்னணியில் நின்று போராட்டத்திற்கு பலமாக விளங்கிய அவர், கடிதம் மூலம் தனது கடைசி ஆசையை குறிப்பிட்டு உயிரிழந்துள்ளார்.

மேலும் அவர் இறப்பதற்கு முன் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.புத்தி பிரபோதாவின் திடீர் மரணம் குறித்து அமைச்சர் சனத் நிஷாந்த தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

“முதல் போராட்டக்காரர் மரணம்! காலி முகத்திடல் போராட்டத்தை ஆரம்பிப்பதில் முக்கிய பங்காற்றியவரும், கோட்டா கோ கிராமத்தின் ஸ்தாபக உறுப்பினருமான புத்தி பிரபோத கருணாரத்ன (முதல் போராட்டக்காரர்) தற்கொலை செய்து கொண்டார்.

கோட்டா கோ கிராமத்தில் முதல் சிறிய குடிசையை கட்டியவர் போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரே புத்தி பிரபோத. புத்தி பிரபோத கருணாரத்ன மே 9 தாக்குதலின் போது நாட்டைப் பற்றவைத்ததில் முக்கிய பங்கு வகித்தார்.

புத்தி பிரபோத கடந்த காலமாக மகிந்தவின் மரணத்திற்காக பிரார்த்தனை செய்தார். மகிந்த இறக்கும் வரை காத்திருந்தார். எனினும், அவர் நீண்டகாலமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அவர் மன உளைச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தது தற்போது தெரியவந்துள்ளது.

பின்னோக்கிப் பார்த்தால், மனநோயால் பாதிக்கப்பட்ட பலரால் காலி முகத்திடல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தின் மற்றுமொரு தலைவரான நிர்மணி லியனகே, இதற்கு முன்னர் உயிரிழந்தார். அவர் கோட்டா கோ கமவின் முதலாவது கூடாரம் அமைப்பதற்குப் பங்களிப்புச் செய்தவர்.

மகிந்த ராஜபக்ச இறக்கும் வரை காத்திருந்த புத்தி பிரபோத போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு வருடத்திற்குள் தற்கொலை செய்து கொண்டார்.முதல் போராளியான புத்தி பிரபோத கருணாரத்னவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்” என சனத் நிஷாந்த தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...