Homeஇலங்கைகாணாமல்போன யுவதி வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்பு

காணாமல்போன யுவதி வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்பு

Published on

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதியொருவர் இன்று வெள்ளிக்கிழமை (12) வயல் பகுதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெளிகல்ல, எல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா என்ற 22 வயது யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) முதல் காணாமல்போயுள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி தான் பணியாற்றும் மருந்தகத்துக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து சென்றபோதே காணாமல்போனதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கெலிஓயா நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் கடமையாற்றி வந்த குறித்த யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தனது தாயிடம் பஸ்ஸுக்கு நூறு ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு பணி புரியும் இடத்துக்கு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், காணாமல் போன யுவதியை கம்பளை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மகாவலி கங்கை ஓடைகள் உட்பட காடுகளிலும் தேடி வந்த நிலையில், இன்று அங்குள்ள வயல் பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...