Homeஇலங்கைகட்டுநாயக்கவில் தரையிறங்க வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

கட்டுநாயக்கவில் தரையிறங்க வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

Published on

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று இரவு கடும் மழை மற்றும் மின்னலுடன் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலாவது விமானம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-605 ஆகும், இது நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து இரவு 10.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் 297 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்தனர் மற்றும் விமானம் நேற்று இரவு 11.35 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியது.

குறித்த விமானத்தின் பயணிகள் மற்றும் ஊழியர்களை பேருந்துகள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மாலைதீவின் மாலேயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-104 நேற்று இரவு 10.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சூழவுள்ள மோசமான காலநிலை காரணமாக இந்த விமானம் இன்று அதிகாலை 12.02 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருந்த நிலையில் விமானத்தில் இருந்த பயணிகளும் விமான ஊழியர்களும் விமானத்தில் இருந்து இறக்கப்படவில்லை.

ஆனால் அதன் பின்னர் சிறிது நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் காலநிலை சீரடைந்த நிலையில் இந்த விமானம் மீண்டும் மத்தள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 01.51 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...