Homeஇலங்கைஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க புதிய ஆரம்பம் அவசியம் - ஜனாதிபதி

ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க புதிய ஆரம்பம் அவசியம் – ஜனாதிபதி

Published on

இந்த வருடத்தின் ஆரம்பமானது அனைவருக்கும் நன்மையான சூழலை வழங்கியுள்ளது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையர்கள் இன்றைய தினத்தை விடவும் செல்வச் செழிப்புடனும் வளமையுடனும் இருக்க முயற்சிக்க வேண்டும் என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இலங்கை தேசமாக ஒற்றுமையாக முன்னோக்கிச் செல்வதன் மூலம் நாம் சந்தேகத்திற்கு இடமின்றி இந்த அபிலாஷையை அடைய முடியும் என்றார்.

அரசியல், இன, மத வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்தப் புத்தாண்டில் எமக்கும் எமது நாட்டிற்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஒரு புதிய ஆரம்பம் இன்றியமையாதது என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் முழு செய்தி பின்வருமாறு:

சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறியதைத் தொடர்ந்து வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு விடியலை நாட்டிலுள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகக் கருதுகின்றனர்.

இந்த மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில், ஏராளமான செழிப்பைப் பெற வேண்டும் என்ற விருப்பத்துடன், மக்கள் பாரம்பரியமாக குறிப்பிட்ட நல்ல நேரங்களில் புத்தாண்டு பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், எங்களின் அன்றாட வாழ்கையை சீர்குலைத்த நாங்கள், சொல்லொணா இன்னல்களுடன் புத்தாண்டு சடங்குகளில் ஈடுபட்டு, இந்த அவலத்திலிருந்து விடுபடுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டோம்.

எவ்வாறாயினும், இந்த ஆண்டின் ஆரம்பம் நம் அனைவருக்கும் ஒரு நல்ல சூழலை வழங்கியுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், எனவே நாம் இன்றைக் காட்டிலும் மிகவும் செல்வச் செழிப்புடன் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு இலங்கை தேசமாக ஒற்றுமையாக முன்னோக்கிச் செல்வதன் மூலம் இந்த அபிலாஷையை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி அடைய முடியும்.

அதன்படி, அரசியல் சார்பு, இனம் மற்றும் மத வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்த புத்தாண்டில் நமக்கும் நமது தேசத்திற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க ஒரு புதிய ஆரம்பம் கட்டாயமாகும்.

இங்கும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...