செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணி செய்த மனிதர்!

ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணி செய்த மனிதர்!

Published on

spot_img
spot_img

கடந்த 84 ஆண்டுகளாக, ஒரே ஜவுளி நிறுவனத்தில் வால்டர் ஓர்த்மேன் எனும் 100 வயது முதியவர் பணியாற்றி வந்திருப்பது கடந்த ஜனவரி மாதம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒரே நிறுவனத்தில் அதிக காலம் பணி செய்தவர் என்ற சாதனையை பிரேசில் நாட்டின் விற்பனை பிரிவு மேலாளரும் 100 வயது முதியவருமான வால்டர் ஓர்த்மேன் படைத்திருப்பதாக கின்னஸ் அறிவித்துள்ளது.

இரண்டாம் உலக போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பு, ரெனாக்ஸ் எஸ்.ஏ என்ற நிறுவனத்தில் கப்பல் உதவியாளராக அவர் பணியாற்ற தொடங்கினார். அப்போது, அவருக்கு 15ஆவது வயது. பின்னர், விற்பனை பிரிவில் அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. அதே துறையில்தான் அவர் இன்று வரை பணியாற்றிவருகிறார்.
2020 வரையிலான காலக்கட்டத்தில், அமெரிக்க பணியாளர் சராசரியாக ஒரு நிறுவனத்தில் 4.1 ஆண்டுகள்தான் பணியாற்றுவதாக அமெரிக்க தொழிலாளர்கள் புள்ளியியல் முகமை தெரிவித்துள்ளது.

ஆனால், இதற்கு விதிவிலக்காக வால்டர் ஓர்த்மேன் பணியாற்றியுள்ளார். அதன் ரகசியம் என்ன என்பதை அவரே விளக்கியுள்ளார். “நான் அதிகம் திட்டமிடுவதும் இல்லை, நாளை பற்றி அதிகம் கவலைப்படுவதும் இல்லை. நாளை எழுந்து, உடற்பயிற்சி செய்து, வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்தினேன்.
கடந்த காலம், எதிர்காலம் பற்றி நினைக்காமல் நீங்கள் நிகழ்காலத்தில் பிஸியாக இருக்க வேண்டும்” என்றார்.

Latest articles

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...

முதலாவது T/20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி T/20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது T/20...

More like this

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...