Homeஇந்தியாஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு மார்ச் 8ம் திகதி நேர்முக தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு மார்ச் 8ம் திகதி நேர்முக தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

Published on

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முக தேர்வு மார்ச் 8ம் திகதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு.
ஒருங்கிணைந்த பொறியியல் பணியில் அடங்கிய பதவியில், காலியாக உள்ள 831 பணியிடங்களுக்கு 2.7.2022 அன்று எழுத்து தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 39,538 பேர் கலந்து கொண்டனர். இத்தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வுக்கு 1,676 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான சான்று சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு மார்ச் 8ம் திகதி முதல் 23ம் திகதி வரை நடைபெறும். இதே போல தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமை செயலக பணிகளில் அடங்கிய ஆங்கில நிருபர் மற்றும் தமிழ் நிருபர் பதவியில் காலியாக உள்ள 12 பணியிடங்களுக்கு, கடந்த டிசம்பர் 21ம் திகதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 98 பேர் கலந்து கொண்டனர். இதில் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...