எலிக் காய்ச்சலின் தாக்கம், தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாக, இலங்கை மருத்துவ சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சங்கத்தின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் சமூகநல வைத்திய அதிகாரி குஷானி தாபரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எனவே, இக்காலப்பகுதியில், விவசாயிகளுக்கு, இது தொடர்பில் தெளிவுபடுத்தி, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுப்பது அவசியம். மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம், எலிக்காய்ச்சல் பரவலிலிருந்து, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமென வைத்தியர் குஷானி தாபரேரா குறிப்பிட்டுள்ளார்.