பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பஹா-கந்தானை பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவி, அவரின் வீட்டிலேயே நேற்று (13.08.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த எஸ்.பி.திலினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் பிரேத பரிசோதனையின் பின்னரே அது தொடர்பில் கூற முடியும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடமும், சகோதரர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்று மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.