Homeஉலகம்உக்ரைனின் முக்கிய நகரத்தை கைப்பற்ற ரஷியா கடும் போராட்டம்.

உக்ரைனின் முக்கிய நகரத்தை கைப்பற்ற ரஷியா கடும் போராட்டம்.

Published on

கீவ், உக்ரைன்-ரஷியா போர் ஓர் ஆண்டை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அந்த வரிசையில் கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முத் நகரை கைப்பற்ற கடந்த சில மாதங்களாக ரஷியா கடுமையாக சண்டையிட்டு வருகிறது. அந்த நகரை நாலாபுறமும் சுற்றிவளைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த ரஷிய படைகள் தற்போது நகருக்குள் நுழைந்து விட்டன. அவர்கள் நகரத்தை கைப்பற்றும் முனைப்பில் உக்ரைன் வீரர்களுடன் வீதிகளில் ஆக்ரோஷமாக சண்டையிட்டு வருகின்றனர். ரஷிய படைகளின் இடைவிடாத தாக்குதல்களில் பாக்முத் நகரம் நிலைகுலைந்துள்ளது. அங்கு வாழும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பாதுகாப்பு முகாம்களில் வாழ்க்கையை கழித்து வருகின்றனர். தாக்குதல்கள் தீவிரமாக இருந்தாலும் பாக்முத் நகரம் இன்னும் ரஷிய படைகளின் கைகளுக்கு செல்லவில்லை என அந்த நகரின் மேயர் அலெக்சாண்டர் மார்ச்சென்கோ தெரிவித்துள்ளார்.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...