சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் துரிதமாக நிதியுதவியை வழங்க வேண்டும் எனவும் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய நிதியமைச்சருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியோவாவுக்கும் இடையில் இன்று வொஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கியு்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு இந்தியா வழங்கி வரும் உதவி சம்பந்தமாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கருத்து வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமான இந்திய நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.