செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கை குறித்து பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கருத்து!

இலங்கை குறித்து பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கருத்து!

Published on

spot_img
spot_img

நாடு கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியில் இருந்து உத்தியோகபூர்வமாக வங்குரோத்து அடைந்து விட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலைமையில், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் கொடுக்கல், வாங்கல்கள், வெளிநாட்டு வர்த்தகம் என்பன நின்று போயுள்ளன.

வங்கி கட்டமைப்பு மிகவும் ஆபத்தான நிலைமையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. நிதிக் கட்டமைப்பு வெடித்து சிதறி வருகிறது.

இதன் காரணமாக சில நாட்களுக்கு அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் நிறுத்தும் அறிவிப்பை அரசாங்கம் வெளியிட நேரிட்டது. இவற்றின் மூலம் நாட்டின் அபிவிருத்தி முற்றாக ஸ்தம்பித்து போயுள்ளதை காண முடிகிறது.

குறிப்பாக தனியார் துறையின் 26 லட்சம் வேலை வாய்ப்புகள் பாரதூரமான ஆபத்துக்கு உள்ளாகி உள்ளது. சுற்றுலாத்துறைக்கு மேலதிகமாக தொழிற்சாலைகளும் தற்போது மூடப்பட்டு வருகின்றன.

நாட்டிற்குள் இயங்கி வந்த முக்கியமான தொழிற்சாலைகள், ஆடை உற்பத்தி துறை என்பன வேறு நாடுகளை நோக்கி கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல் அரச சேவையும் படிப்படியாக பாரதூரமான நெருக்கடியை நோக்கி செல்ல உள்ளது எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...