சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி இன்று அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கிராம் சீனிக்கு 25 சதமாக இருந்த வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சீனி மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி அதிகரிப்பினால் சீனியின் விலையும் விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.