சிங்கப்பூரில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணி புரிந்த இலங்கைப் பெண் ஒருவர் மாடிக் கட்டிடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது இதுவரை தெரியவரவில்லை என கூறப்படுகிறது.
தான் பணியாற்றும் வீட்டில் உள்ளவர்கள் தன்னைப் பிரச்சினை செய்வதாகவும் தான் இலங்கை செல்ல விரும்புவதாகவும் உயிரிழந்த பெண் தனது நண்பிகளிடம் ஏற்கனவே கூறியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.