Homeஇலங்கைஇறப்பர் உற்பத்தியில் கடும் வீழ்ச்சி

இறப்பர் உற்பத்தியில் கடும் வீழ்ச்சி

Published on

பல வருடங்களாக தொடரும் இலை உதிர்வு நோய் காரணமாக இறப்பர் விளைச்சல் வேகமாக குறைந்து வருவதாக கொழும்பு இறப்பர் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறப்பர் விளைச்சல் குறையும் பட்சத்தில் நாட்டின் தேவைக்காக பாலை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அதன் தலைவர் மனோஜ் உடுகம்பலா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புதிதாக நடப்பட்ட இறப்பர் மரத்தினால் 03 வருடங்களுக்குள் பாலை உற்பத்தி செய்ய முடியும். எனினும் இலை உதிர்வு நோய் காரணமாக அறுவடை செய்வதற்கு ஏழு வருடங்கள் ஆகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நோயை குணப்படுத்தும் வேலைத்திட்டத்தை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாக கொழும்பு இறப்பர் வர்த்தகர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

தற்போது உள்ளூர் கைத்தொழில்களுக்காக வருடாந்தம் 70,000 மெற்றிக் தொன் இறப்பர் உற்பத்தி செய்யப்படுவதுடன் நாட்டில் 150,000 மெற்றிக் தொன் இறப்பர் தேவைப்படுகின்றமை குறிப்பி்டத்தக்கது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...