Homeஇலங்கைஇரண்டு மாகாணங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு மாகாணங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

Published on

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யும்.புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காற்று வடகிழக்கு திசையில் வீசும், காற்றின் வேகம் மணிக்கு 25-35 கி.மீ. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாக காணப்படும்.

Latest articles

GMPL 3.0 இல் கலக்கப்போகும் 7 அணிகள் விபரம்.

  கல்வியங்காடு மெகா நைட் பிரிமியர் லீக் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சயாக கிப்ஸ் மைதானத்தில் இடம்பெறும், இத் தொடரில் இந்த...

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

13 ஆவது ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பமாகிறது. 10 அணிகள் மோதும் உலக கிண்ண...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5000 சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5,000 சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்...

More like this

GMPL 3.0 இல் கலக்கப்போகும் 7 அணிகள் விபரம்.

  கல்வியங்காடு மெகா நைட் பிரிமியர் லீக் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சயாக கிப்ஸ் மைதானத்தில் இடம்பெறும், இத் தொடரில் இந்த...

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

13 ஆவது ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பமாகிறது. 10 அணிகள் மோதும் உலக கிண்ண...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...