செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஇமயமலையில் சோகம்-ஜோஷிமத் நகரத்தின் பல பகுதிகளில் கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டு அப்படியே பூமிக்குள் புதையுண்டு போய்...

இமயமலையில் சோகம்-ஜோஷிமத் நகரத்தின் பல பகுதிகளில் கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டு அப்படியே பூமிக்குள் புதையுண்டு போய் வருகின்றன.

Published on

spot_img
spot_img

உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித நகரங்களில் ஒன்றான ஜோஷிமத் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. இயற்கை பேரிடரால் ஜோஷிமத் புனித நகரம் புதையுண்டு போகிற பேரபாயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் இன்று பல்வேறு தரப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. இமயமலையில் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கான மத்திய தலமாக இருப்பது ஜோஷிமத். இங்கிருந்து புகழ்பெற்ற ஆன்மீக தலமான பத்ரிநாத் 44 கி.மீ. தொலைவில் உள்ளது. பத்ரிநாத் கோவில் நிர்வாகமே, ஜோஷிமத்தில் உள்ள ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஜோஷிமத், புனித நகரமானது ஆதி சங்கராச்சாரியால் உருவம் பெற்றது.

ஜோஷிமத் என்ற புனிதநகரம் இனி இருக்குமா? என்ற அச்சம் உருவாகி உள்ளது. ஜோஷிமத் நகரத்தின் பல பகுதிகளில் கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டு அப்படியே பூமிக்குள் புதையுண்டு போய் வருகின்றன. தற்போதைய நிலையில் சுமார் 600 கட்டிடங்கள் பூமிக்குள் புதையும் நிலையில் இருக்கின்றன.

இதனால் ஜோஷிமத் நகரைவிட்டு மக்கள் பெருமளவில் வெளியேறி வருகின்றனர். அத்துடன் எந்தநேரத்திலும் எதுவும் பேராபயம் நிகழ்ந்துவிடக் கூடுமோ என்ற அச்சத்தால், ஹெலிகாப்டர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் இருக்கிறது. மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஜோஷிமத் நகரம் புதையுண்டு போவதற்கு காரணமே இமயமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் என குற்றம்சாட்டப்படுகிறது. நீர்மின் நிலையம், நெடுஞ்சாலை விரிவாக்கம் என பல்வேறு திட்டப் பணிகளும் திட்டங்களும் இமயமலையில் இப்படி ஒரு துயரத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. இப்படியான ஒரு பேரவலம் ஏற்படும் என்பதை பல ஆண்டுகளாகவே எச்சரித்து வந்துள்ளனர். திடீரென ஏற்படும் நிலச்சரிவு, பனிச்சரிவு ஆகியவையும் பெரும் துயரம் நிகழப் போவதை சுட்டிக்காட்டி வந்தன. ஆனால் அதை அலட்சியப்படுத்தியன் விளைவாக இன்று ஜோஷிமத் நகரம் புதையுண்டு கொண்டிருக்கிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக இன்று பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்த உள்ளது. பிரதமர் அலுவலக செயலாளர் மிஸ்ரா தலைமையில் பல்வேறு துறைசார் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். உத்தரகாண்ட் மாநில அரசு அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு பணியினரும் இந்த ஆலோசனையில் பங்கேற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய உள்ளனர்.

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...