சோபகிருது ஆண்டு – ஐப்பசி 16 – வியாழக்கிழமை (02.11.2023)
நடசத்திரம் : மிருகசீரிஷம் காலை 7.45 வரை பின்னர் திருவாதிரை
திதி : பஞ்சமி காலை 12.31 வரை பின்னர் சஷ்டி
யோகம் : மரணயோகம்
நல்ல நேரம் : காலை 10.45 – 11.45
வியாழக்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை,4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை,8 முதல் 9 வரை )
மேஷம் : முக்கியஸ்தர்களின் உதவி நம்பிக்கை தரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். உணவு விஷயத்தில் அக்கறை செலுத்தவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
ரிஷபம் : முடியாத வேலைகளை செய்ய வேண்டாம். பிரியமானவர்களிடம் அனுசரித்து போகவும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.
மிதுனம் : மனக் கவலை அகலும். சாதுர்யமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் அலைச்சல் ஏற்படும்.
கடகம் : தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
சிம்மம் : குடும்பத்தில் மனநிம்மதி ஏற்படும். புதிய கோணத்தில் சிந்தித்து செயல்பட முடியும். உதவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கன்னி : சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
துலாம் : திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வீண் சண்டை, சச்சரவுகளை தவிர்க்கவும். மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுகொள்ள முடியும்.
விருச்சிகம் : குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
தனுசு : கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். அடிக்கடி மறதி தொல்லை வரும். நல்ல தகவல் வந்து காதில் விழும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
மகரம் : குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். திட்டமிடாத செலவுகளை சமாளிக்க வேண்டி வரும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கும்பம் : குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். பயணங்கள் அனுகூலமான திருப்பங்கள் தரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மீனம் : பொது காரியங்களில் ஈடுபாடு வரும். மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறக்கும்.