சோபகிருது ஆண்டு – கார்த்திகை 28 – வியாழக்கிழமை (14.12.2023)
நட்சத்திரம் : மூலம் காலை 11.42 வரை பின்னர் பூராடம்
திதி : துவிதியை காலை 3.03 வரை பின்னர் திரிதியை
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை : 12.15 – 1.15
வியாழக்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)
மேஷம் :குடும்ப நபர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். பயணங்களால் நன்மை உண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷபம் :திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தெய்வ வழிபாடு நன்மை தரும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும்.
மிதுனம் :மனதில் தெளிவும், உற்சாகமும் பிறக்கும். நண்பர்களுடனான மனக்கசப்புகள் நீங்கும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கடகம் :எதிர்த்து நின்றவர்கள் விலகி நிற்பர். சவாலான காரியங்களையும் எளிதாக சமாளிக்க முடியும். சொத்து விவகாரத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்மம் :குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கன்னி :தேக நலனில் அக்கறைகொள்வது அவசியம். பிராத்தனைகள் நிறைவேறும். வரவைக் காட்டிலும் செலவுகள் கூட இருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
துலாம் :குடும்ப செலவுகளை குறைக்க திட்டமிடவும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். வெளி உணவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
விருச்சிகம் :குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். மனக்குழப்பம் நீங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
தனுசு :குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். குடியிருக்கும் வீட்டை பராமரிக்க வேண்டிவரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மகரம் :பொருளாதார நிலை உயரும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
கும்பம் :குடும்பத்தில் ஆதரவு பெருகும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். கொடுக்கல், வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம் :நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். மனபயத்தை நீக்கவும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.