இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக அடைமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில், ரியாவு தீவில் இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் சுமார் 50 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மண்சரிவு காரணமாக பல வீடுகள் தரைமட்டமாகி உள்ள நிலையில், அடித்து வரப்பட்ட சேறு மற்றும் குப்பைகளால் பல வீடுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மழை வெள்ளம் காரணமாகவும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனவே பாதிப்புக்குள்ளான 41,000 பேர் கடந்த வாரம் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.