Homeஇந்தியாஇந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் தொற்று

இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் தொற்று

Published on

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக இந்தியச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 223 நாட்களில் இல்லாத அளவில் நேற்றைய தினம் (12.04.2023) ஒருநாளில் கோவிட் பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் (13.04.2023) இந்தியச் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,158 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு ஒரே நாளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளது.

மேலும், தினசரி கோவிட் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியிருப்பது கடந்த 8 மாதங்களில் இதுவே முதல் முறையாகும்.

தினசரி பாதிப்பு விகிதம் 4.42 சதவீதமாகவும், இந்த வரத்தின் பாதிப்பு விகிதம் 4.02 சதவீதமாகவும் உள்ளது என்றும் நேற்றைய தினம் அதிகபட்சமாகக் கேரளாவில் 3,416 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 இலட்சத்து 86 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளதாகவும் இந்தியச் சுகாதாரத்துறை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...