இந்தியாவின் மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் மியான்மர் மக்களின் சுயவிபரங்களை சேகரிக்கும் பணிகளை அந்த மாநில விரைவுப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இரண்டு இனங்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இதுவரையில் 150க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அத்துடன் பல பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் மணிப்பூரில் இரண்டு பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்ற காணொளி ஒன்று அண்மையில் வெளியான நிலையில் அது தொடர்பில் அந்த நாட்டு சி.பி.ஐ எனப்படும் மத்திய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.