Homeஇந்தியாஇந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் - இஸ்ரோ வெளியிட்ட தகவல்

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் – இஸ்ரோ வெளியிட்ட தகவல்

Published on

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் இன்று (23 ஆகஸ்ட்) மாலை நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சந்திரயான்-3 தொடர்பில் இன்று மதியம் இஸ்ரோ வெளியிட்ட தகவலில்,

தானியங்கி தரை இறங்கும் வரிசையை தொடங்க அனைத்தும் தயாராக உள்ளது. நிலவில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் லேண்டர் தரை இறங்கும் பணி மாலை 5.44 மணிக்கு தொடங்கும்.

இந்த பணி தொடங்கியவுடன் விஞ்ஞானிகள் குழு கட்டளைகளை வரிசையாக செயல்படுத்துவதை உறுதி செய்து கொண்டே இருக்கும். இவ்வாறு இஸ்ரோ கூறியுள்ளது.

விக்ரம் லேண்டர் எப்படி தரை இறங்கும்? அடுத்து என்ன நடக்கும்? என்பது கடைசி 7 நிமிடத்தில் தெரியும். இதை “7 மினிட்ஸ் ஆப் டெரர்” என்று அழைக்கிறார்கள். ஏன் என்றால் இந்த 7 நிமிடங்கள் என்பது விக்ரம் லேண்டர் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நிலவின் மேற்பரப்பில் மிதக்கும்.

அந்த சமயத்தில் லேண்டர் முழுவதும் அதில் உள்ள சென்சார்கள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் செயல்படும். அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகளும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...