Homeஉலகம்ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்..அச்சத்தில் பொதுமக்கள்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்..அச்சத்தில் பொதுமக்கள்!

Published on

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று 4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 22ம் தேதி பைசாபாத் நகரில் இருந்து 133 கிமீ தொலைவில் ஹிந்துகுஷ் மலைத் தொடரில் 6.6 என ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இரவு 10.17 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அண்டை நாடுகளான துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பேகிஸ்தான் ஆகிய நாடுகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்லி, ஹரியானா, ஹிமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் சுமார் 12 பேர் பலி ஆகினர், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், ஆஃப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காபூல் அருகே 85 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் பொருட்கள் சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ஆஃப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...