Homeஉலகம்அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரத்திற்கு கிடைத்துள்ள அங்கிகாரம்

அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரத்திற்கு கிடைத்துள்ள அங்கிகாரம்

Published on

அவுஸ்திரேலியாவில் அதிக மக்கள் வாழும் நகரமாக மெல்போர்ன் நகரம் பெயரிடப்பட்டுள்ளது.

19ஆம் நூற்றாண்டின் தங்க அகழ்வுக்குப் பின்னர், முன்னெடுக்கப்பட்ட எல்லை மாற்றத்தைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் அதிக சனத்தொகை கொண்ட நகரமாக மெல்போர்ன் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் – சிட்னி நகரமானது, 100 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக சனத்தொகை கொண்ட நகரமாக காணப்பட்டது. எனினும், மெல்போர்ன் நகரத்துடன், மெல்டன் புறநகர் பகுதியையும் இணைக்கப்பட்ட பின்னர் மெல்போர்ன் சனத்தொகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின் படி, 2021ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் சிட்னியின் சனத்தொகையை காட்டிலும் மெல்போர்னின் சனத்தொகை 18,700 பேரால் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரம் என்ற பெருமையை மெல்போர்ன் கைப்பற்றுவது இது முதல் முறை அல்ல.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், விக்டோரியா மாநிலத்திற்கு புலம்பெயர்ந்தோர்கள் வருகைத் தந்ததையடுத்து அங்கு முன்னெடுக்கப்பட்ட தங்கம் அகழ்வின் விளைவாக, மெல்போர்ன் 1905 ஆண்டு வரை சிட்னி நகரத்தை விடவும் சனத்தொகையில் முன்னிலையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...