அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மே 8 முதல் 22ம் தேதி வரை இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு நடைபெற்றது. 164 அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள 1,07,395 இடங்களுக்கு சுமார் 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த நிலையில், அரசு கலைக்கல்லூர்களில் மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இந்த தரவரிசைப்பட்டியல் தமிழ்நாட்டில் உள்ள அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.