குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கண்டியில் கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அனுராத விதான நேற்று (30) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட 12 மாணவர்கள் கடந்த 22ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் ஜனவரி 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன, அவரது மகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் உட்பட 14 மாணவர்களின் கல்வியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.