Homeஇலங்கைஅத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு.

Published on

03 நாட்களுக்குள் அமெ.டொலரின் பெறுமதி 50 ரூபாய் குறைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு.இலங்கையின் ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் குறைவடைவதன் காரணமாக கடந்த சில நாட்களாக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விரைவாக குறைந்து வருகின்றன.

சில வாரங்களுக்கு முன்னர் சந்தையில் சீனி ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 220 ரூபாவாக இருந்ததோடு இன்று அது 200 ரூபாவாக குறைவடைந்துள்ளது. ஒரு கிலோ பருப்பின் மொத்த விலை 340 விலிருந்து 325 வரை குறைவடைந்துள்ளது. 115 ரூபாவாக காணப்பட்ட பெரிய வெங்காயம் ஒரு கிலோ இன்று 95 ரூபாய் வரை குறைந்துள்ளது.

அத்துடன் நேற்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைவடைந்துள்ளது. நேற்று (8) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், 450 கிராம் (ஒரு இறாத்தல்) நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கமும் தெரிவித்துள்ளது. இதேவேளை, பாண் தற்போது, 160, 170 மற்றும் 180 ரூபா ஆகிய வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது.அதேபோன்றுநேற்று (8) முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலையை குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...